நாட்டில் ஏழாவது ஜனாதிபதியினை தெரிவு செய்வதற்கா எட்டுவது ஜனாதிபதி தேர்தல் நாளை (16) திகதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகளை கொண்;டு செல்லும் நடவடிக்கைகள் இன்று காலை ஆரம்பமாகின.
நுவரெலியா மாவட்டத்தில் வாக்கெடுப்புக்களுக்காக வாக்கெடுப்புநிலையங்களுக்கு வாக்கும்பெட்டிகள் இன்று காலை காமினி தேசிய கல்லூரியிலிருந்து ஆரம்பமாகின.
இதன்போது வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்வதற்கு தனியார் மற்றும் அரச வாகனங்கள் பயன்படுத்தப்பட்டிருந்ததுடன் சகல வாக்கெடுப்பு பெட்டிகளுடனும் இரண்டு பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தன.
வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லும் வீதிகளில் இடைக்கிடையே பொலிஸார் மற்றும் இரானுவத்தினர் இடைக்கிடையே பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன் பொலிஸாரின் ரோந்து நடவடிக்கைகளும் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.