பசறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆறு மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து வரலாற்று சாதனை-படங்கள்.

பழுலுல்லாஹ் பர்ஹான்-
துளை மாவட்டத்தின் பசறை கல்வி வலயத்தின் கீழ் இயங்கிரும் பசறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் வரலாற்றில் முதற்தடவையாக 2019ம் ஆண்டு இம்முறை ஆறு மாணவர்கள் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் திறமை சித்திகளை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
மேற்படி புலமைப்பரிசில் பரீட்சையில் திறமை சித்திகளை பெற்று வரலாற்று சாதனை படைத்த மாணவர்களையும்,மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியையையும் கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் பசறை முஸ்லிம் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பசறை முஸ்லிம் மகா வித்தியாலய பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களின் ஏற்பாட்டில் பாடசாலை அதிபர் எம்.என்.எம்.இல்யாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதிகளாக பசறை வலயக் கல்விப்பணிப்பாளர் ஜே.டி. சேனாத்ரேரா,பசறை கல்வி வலயத்தின் தமிழ் பிரிவுக்காக வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.மோகனேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் திறமை சித்திகளை பெற்று சாதனை படைத்த ஆறு மாணவர்களும் பதக்கமும்,சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியை மகேஸ்வரி மனோகர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
பசறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர்,ஆசிரியர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள்,மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோரின் பெரும் முயற்சியின் பயனாக 2019ம் ஆண்டு இம்முறை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் எம்.ஏ.ஏ.இமாத் 151,ஆர்.எம்.எம்.ரிஸ்வி அஹமத் 155,எம்.எப்.எப்.நபீஹா 169,எம்.ஆர்.எப்.ஹப்ஸா 174,எம்.என்.எப்.நிஸ்லா 162,எஸ்.எஸ்.ரிஸ்லா 173 ஆகியோர் அதிக புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -