மூதூர் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.


எப்.முபாரக்-
மூதூர் பிரதேச சபையின் 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸ் தலைமையில் இன்று வியாழக்கிழமை (28) இடம்பெற்றது.இதில் மூதூர் பிரதேச சபையின் மொத்த உறுப்பினர்கள் 24 பேரில் 23 உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியதோடு சுயேட்சைக்குழு உறுப்பினர் ஏம்.நௌபால்தீன் மாத்திரம் இவ் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்ததோடு பெரும்பான்மையினால் மூதூர் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.

2020 ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவுத் திட்ட நிதியாக 180 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வரவு செலவுத் திட்டத்தில் 20 இலட்சம் ரூபாய் நிதி ஆகக் கூடுதலாக வீதி மின்விளக்கு பொருத்தலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2019 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தை விட 2020 ஆம் ஆண்டுக்கான வரவு சிறப்பாக இருப்பதாக சகல உறுப்பினர்களும் சிலாகித்து பேசியமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -