கந்தளாய் பகுதியில் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தவர்களினால் கூட்டம் நடாத்திய நால்வர் கைது.

எப்.முபாரக்-

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தவர்களினால் தேர்தல் கூட்டம் நடாத்திய நால்வரை இன்று(15) மாலை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த 35,38,28 மற்றும் 30 வயதுடைய நால்வரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய் பேராறு பகுதியில் பொது ஜன பெரமுன கிளை காரியாலயத்தின் பின்னால் உள்ள வீடொன்றினுல் கட்சி ஆதரவாளர்களுக்கிடையில் தேர்தல் கூட்டம் நடாத்திய நால்வரை கைது செய்துள்ளதாகவும்,
சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் கூட்டங்கள் கடந்த புதன் கிழமையிலிருந்து தேர்தல் திணைக்களத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -