கொத்மலை நீர்த்தேக்கத்தில் சிறுமியின் சடலம் மீட்பு


க.கிஷாந்தன்-பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்மலை நீர்த்தேக்கத்தில் 28.11.2019 அன்று மதியம் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொது மக்கள் வழங்கிய தகவலின் அடுத்தே இச்சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் மற்றும் பொது மக்களின் உதவியுடன் மீட்கப்பட்ட இச்சடலத்தை மரண விசாரணைகளின் பின் வைத்திய பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பூண்டுலோயா - ஹதூனுவாவ, வட்டாந்தர பகுதியை சேர்ந்த 18 வயதுடைய சிறுமி எனவும், 27.11.2019 அன்று காலை முதல் காணாமல் போய் இருந்ததாகவும், பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 28.11.2019 அன்று மதியம் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சானிக்கா மதுஷானி ஏக்கநாயக்க (வயது – 18) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இப்பெண் தற்கொலை செய்து கொண்டரா அல்லது கொலை செய்யப்பட்டு நீர் தேக்கத்தில் எறியப்பட்டுள்ளாரா என்பது தொடர்பாக பொலிஸார் புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரைணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -