அட்டாளைச்சேனை ஆலங்குளம் அர்ரஹூமானியா வித்தியாலத்தின் 50 வருட பொன் விழா இன்று (30) பாடசாலை அதிபர் M.A.C.M உபைத்துலாஹ் தலைமையில் நடைபெற்றது.
இன் நிகழ்வில் பிரதம அதிதியாக பாரளுமன்ற உறுப்பினர் A.L.M நஸீர்அவர்களும், கெளரவ அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் மற்றும் முன் பள்ளி பாடசாலை தவிசாளார் M.S உதுமாலெப்பை அவர்களும் இன் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இன் நிகழ்வில் புலமைப் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கு நினைவுச்சின்னங்களும் மற்றும், (2014-2018) ஆண்டு காலப்பகுதியில் (கா.பொ.த) சாதாரண தர பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்களும் கெளரவிக்கப்பட்டதுடன் முன்னால் அதிபர்களுக்குமான நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
