எதிர்வரும் 5ம் திகதி ரணிலும், 9ம் திகதி சஜிதும் ஓட்டமாவடிக்கு விஜயம்.


எச்.எம்.எம்.பர்ஸான்-
பிரதமர் ரணில் விக்ரம சிங்கவும், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவும் ஓட்டமாவடிக்கு வருகை தரவுள்ளனர் என்று இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீர்அலி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசாவை ஆதரித்து நடைபெறவுள்ள பிரமாண்டமான தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொள்ள எதிர்வரும் 5ம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 6.30 மணிக்கு ஓட்டமாவடி, செம்மண்ணோடை ஜெமீலா அரிசி ஆலை (கப்பல் ஹாஜியார் மில்) வளாகத்திற்கு ரணில் விக்ரமசிங்க வருகை தரவுள்ளார்.
அத்தோடு இம்மாதம் 9ம் திகதி ஓட்டமாவடி அமீர் அலி மைதானத்தில் காலை 8.30 மணிக்கு இடம்பெறவுள்ள கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாச அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தரும் சஜித் பிரமதாசாவின் வருகை கிழக்கு மாகாணத்தின் முதலாவது விஜயம் இதுவாகும் என்று தெரிவித்த இராஜாங்க அமைச்சர் இந்நிகழ்வில் பெருந்தொகையான ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், அமைப்புக்களின் அங்கத்தவர்கள் அனைவரும் கலந்து கொண்டு நமது ஒற்றுமையையும், பலத்தையும் காண்பிக்க அவசியம் வருகை தர வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -