நீண்ட வார விடுமுறை கருதி 4 விசேட ரயில்கள்

ஐ. ஏ. காதிர் கான்-

நான்கு விசேட புகையிரத சேவைகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீண்ட வார இறுதியுடனான விடுமுறை காரணமாக, பயணிகளின் வசதிக்காக, எதிர்வரும் 8 ஆம், 9 ஆம் மற்றும் 11 ஆம் திகதிகளில் விசேட புகையிரத சேவைகள் இயங்குமெனவும், புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த தினங்களில் கொழும்பு, கோட்டையிலிருந்து இரவு 7.35 மணிக்கு புறப்படும் புகையிரதம் மறுநாள் அதிகாலை 4.33 மணிக்கு பதுளையைச் சென்றடையவுள்ளது.
அத்தோடு, இரவு 8.00 மணிக்கு பதுளையிலிருந்து புறப்படும் புகையிரதம் மறுநாள் அதிகாலை 5.26 மணிக்கு கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடையுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -