வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள் தபால் நிலையங்களுக்குச் சென்று பெற்றுக்கொள்ளலாம்

ஐ. ஏ. காதிர் கான்-

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் 2192 தபால் அலுவலகங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் 75 வீதம் நிறைவடைந்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வாக்காளர்கள் அட்டைகள் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் என, பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க கூறியுள்ளார். இதற்காக 8000 ஊழியர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்காளர் அட்டைகள் இதுவரை கிடைக்கப் பெறாதவர்கள், அருகிலுள்ள தபால் நிலையங்களுக்குச் சென்று தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என, பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -