தம்பலகாம பகுதியில் உள்ள 25 கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் அப்துல்லா மஃறூப் எம்.பியால் வழங்கி வைப்பு

ஹஸ்பர் ஏ ஹலீம்-
ம்பலகாம பிரதேச செயலகத்தில் உள்ள பதிவு செய்யப்பட்டு தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.
தம்பலகாம பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதி தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில்  (27)மாலை இடம் பெற்ற குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தார்.
நீண்ட காலம் இடம் பெயர்ந்தோர் மீளக்குடியேற்றுதல் செயலணி திட்ட அலகின் மூலமான நிதியில் இருந்து சுமார் 10 இலட்சம் ரூபா செலவில் 25 விளையாட்டு கழகங்களுக்கு இதன் போது உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதில் தம்பலகாம பிரதேச சபை உறுப்பினர்களான தாலிப் அலி ஹாஜியார், ஆர்.எம்.றெஜீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -