கிலோ கிராம் 50 நிறையுடைய சீமெந்து மூடை ஒன்றின் விலையை 100 ரூபாவால் அதிகரிப்பதற்கு மூன்று நிறுவனங்களுக்கு, நுகர்வோர் விவகார அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 12 ஆம் திகதிக்குப் பின்னர் பொதியிடப்பட்ட சீமெந்து மூடைகளுக்கு மாத்திரமே விலை அதிகரிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் என்.எஸ்.எம்.பவுசர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்பிரகாரம், 995 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு மூடை சீமெந்து 1,095 ரூபாவாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேலும் இரண்டு நிறுவனங்களுக்கு ஏற்கனவே சீமெந்துக்கான விலையை 100 ரூபாவால் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
