திருகோணமலை கோணேச்சர ஆலயத்தின் கடலை அண்டிய பகுதியில் பெரும்தொகையான நாணயங்கள் மற்றும் நாணய தாள்களும் குவிந்துள்ளன.



எப்.முபாரக்-திருகோணமலை கோணேச்சர ஆலயத்தின் கடலை அண்டிய பகுதியில் பெரும்தொகையான நாணயங்கள் மற்றும் நாணய தாள்களும் இன்று(5) குவிந்து கிடக்கின்றன.குறித்த பகுதியில் மக்கள் நடமாட முடியாதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடலின் குத்துச் சாய்வுப் பகுதியில் குறித்த நாணயங்களும் நாணய தாள்களும் குவிந்துள்ளன.இந்த நிலையில் அவை மழையில் சில உக்கிபோயுள்ளதாகவும் தெரிவிகபப்டுகின்றது.
இதேவேளை கோணேச்சர் ஆலயத்திற்கு செல்லும் மக்கள் நம்பிக்கையின் அடிப்படையில் வீசிய நாணயங்களே அவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை கேட்பார் பாரற்று கிடக்கும் குறித்த நாணயங்களை ஆலயத்திற்குகோ அல்லது வேறு நற்காரியங்களிற்கோ பயன்படுத்தலாமே என சமூக ஆர்வர்கள் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியில் பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -