அபாண்டமான பழிகளை சுமத்தி தேர்தலில் வெற்றி பெருவோம் என கனவு காண வேண்டாம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளரும்,பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.
கிண்ணியாவில் இன்று(22) காலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:
இந்த நாட்டிலுள்ள ஒரு தேசியக் கட்சியின் தேசியத் தலைவருக்கு பழைய வீடியோக்களை காண்பித்து சிங்கள மக்கள் மத்தியில் கசப்பான உணர்வுகளை விதைக்க முனையாதீர்கள்,சிங்கள,மற்றும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு தெரியும் அமைச்சர் ஹக்கிமினின் நடை உடை,பாவனை மற்றும் அரசியல் நடவடிக்கைகள் யாரையும் பொது மேடைகளில் விமர்சிக்காத ஒரு சிறந்த அரசியல் வாதியை தென்னிலங்கை அரசியல் வாதிகள் வாக்குகளுக்காக வேண்டி மீண்டும் பிரச்சினைகளை ஏற்படுத்த பார்க்கின்றார்கள்.
இவ்வாரான பொய்களை கேட்டு மக்கள் வாக்களித்த காலம் மலையேறிவிட்டது மீண்டும் நடைமுறைப்படுத்த முடியாது மக்கள் அனைத்தையும் அறிந்து வைத்துள்ளார்கள்.
சஹ்ரானுடன் தொடர்பில்லாத தூய்மையான அரசியல் வாதியை தொடர்புபடுத்தி வீடியோக்களை வெளியிடுவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.அவ்வாறு வாக்குகளை பெற முடியும் என கனவுகாளை காண வேண்டாம் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,கட்சி ஆதரவாளர்கள்,பொது மக்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
