இன்று காரைதீவில் சு.கட்சி கோத்தா ஆதரவாளர்கள் பட்டாசுகொழுத்தி ஆதரவு



காரைதீவு நிருபர் சகா-
திர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா இதை அறிவித்துள்ளார்.
இதனையடுத்து ஶ்ரீலங்கா சு.க கோத்தபாயவிற்கு ஆதரவு தெரிவித்ததை முன்னிட்டு காரைதீவு ஶ்ரீ.சு.க ஆதரவாளர்களும் இதற்கு ஆதரவை வெளிப்படுத்தி பட்டாசு கொளுத்தினர்.
காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயமுன்றலிலுள்ள யாழ்நூல் சந்தியடியில் ஸ்ரீல.சு.கட்சி காரைதீவு பிரதேச அமைப்பாளரும் முன்னாள உபதவிசாளருமான எந்திரி வீரகத்தி கிருஸ்ணமூர்த்தி தலைமையிலான குழுவினர் பட்டாசு கொழுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதேவேளை காரைதீவு ஊருக்குள் உள்ள சுவர்களில் சஜீத் பிரேமதாசாவின் தமிழ்மொழியிலான போஸ்டர்கள் இரவோடிரவாக ஒட்டப்பட்டுள்ளன.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -