பைஷல் இஸ்மாயில் -
அம்பாறை ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு கடந்த பல வருடங்களாக உணவு வகைகள் வழங்கப்பட்டு வந்தன. இந்த உணவு வகைகள் கடந்த 09 நாட்களாக வழங்கப்படாமல் தீடிரென நிறுத்தியதை எதிர்த்து அங்கு கடமையற்றும் ஊழியர்களினால் 2 மணி நேர கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆயுர்தே சுவசேன சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் குறித்த வைத்திசாலையின் ஊழியர்களினாலும் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று (22) மதியம் 12.00 மணியிருந்து 2.00 மணிவரை வைத்தியசாலை முன்றலில் முன்னெடுக்கப்பட்டது.
“எங்களுக்கு பல ஆண்டு காலமாக வழங்கப்பட்டு வந்த உணவுகளை தாருங்கள்”, “ஹெலசுவய (Helasuwaya) உணவு எங்களுக்கு வேண்டம்”, “வழமையாக வழங்கப்பட்டு வந்த உணவு வகைகளை எங்களுக்கு மீண்டும் தாருங்கள்“, “வேலை செய்வது சாப்பிட்டு உயிர் வாழ்தற்காக எங்களது உயிர்களை போக்காட்டுதற்காக அல்ல“, உங்களின் உரிமைகள் மீது கை வைக்கவேண்டாம்“
எங்களின் உரிமையை மீண்டும் வழங்குங்கள்”, எங்களது வைத்திசாலைக்கு மட்டும் ஏன் இந்த நிலை??? எங்களின் உணவுகளை திடீரென நிறுத்தக் காரரணம் ஏன்??? பெறியவர்களுக்கு பெரியது மாதிரி, கஷ்டப்படுகின்ற எங்களைப் போன்ற சிறிய ஊழியர்களுக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலை??? என்ற சுலோகங்களை தாங்கிய கோசங்களை எழுப்பினர்.
இவ்வாறு வழங்கப்பட்டு வந்த உணவு வகைகளை நிரந்தரமாக நிறுத்துமாறு கோரிய கடிதம் ஆயுர்வேத திணைக்கள ஆணையாளரினால் அம்பாறை ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஏ.எச்.சோமசிறிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் பிரகாரமே இவர்களுக்கான உணவு வகைகள் நிறுத்தப்பட்டமைக்கான காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.