புதுநகரில் ஆரம்பகல்வி கற்றல்வளநிலையம் திறப்புவிழா!


காரைதீவு நிருபர்சகா-
ல்வியமைச்சின் 'அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' என்ற திட்டத்தின்கீழ் சம்மாந்துறைவலய மல்வத்தை புதுநகரம் அ.த.க.பாடசாலையில் நிருமாணிக்கப்பட்ட ஆரம்பக்கல்வி கற்றல்வளநிலையத்திறப்பு விழா இன்று(10) செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
பாடசாலை அதிபர் நல்லரெத்தினம் சுந்தரநாதன் தலைமையில் நடைபெறவுள்ள இத்திறப்புவிழாவில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவி.கோடீஸ்வரன் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

கௌரவ அதிதிகளாக மேற்படி திட்டத்தின் பணிப்பாளர் கே.பத்மநாதன் சம்மாந்துறைவலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் திட்டத்திற்கான கிழக்குமாகாணப் பொறியியலாளர் ரி.அருள்ராஜ் ஆகியோரும் கலந்து சிறப்பிப்பார்கள்.
1கோடி 60லட்சருபா செலவில் இவ் ஆரம்பக்கல்வி கற்றல்வளநிலையம் நிருமாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -