அவசர அனர்த்த நிலைமைகளின்போது தகவல் வழங்குவதற்காக, இரண்டு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவம் தொடர்பிலான பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதற்கமைய, 011 - 2587229 மற்றும்
011 - 2454576
ஆகிய தொலைபேசி இலக்கங்கள் வாயிலாக, சுற்றாடல் கடல்சார் அனர்த்த முகாமைத்துவப் பிரிவில் அறிவிக்கலாம் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்காக, 50 விசேட பயிற்சி பெற்ற பொலிஸ் உயிர் காக்கும் மற்றும் அனர்த்த நிவாரண அதிகாரிகள் 150 பேர் கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறைஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சுழியோடல் பயிற்சி பெற்ற 50 பொலிஸ் அதிகாரிகளை அவசியமான இடங்களுக்கு உடனடியாக அனுப்பவும் பொலிஸ் கடற்படைப் பிரிவு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
மேலும், பொலிஸ் கடற்படைப் பிரிவுக்குச் சொந்தமான 50 படகுகள் மற்றும் 35 தோணிகளும் அந்தந்தப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.