முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல்முன்னணியின் அனர்த்தமுகாமைத்துவச் செயலமர்வு!

காரைதீவு நிருபர் சகா-
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல்முன்னணியின் ஏற்பாட்டில் மருதமுனை கலசார மண்டபத்தில் அனர்த்தமுகாமைத்துவச் செயலமர்வொன்று நேற்று முன்னணியின் கல்முனைப்பிராந்திய இணைப்பாளர் செல்வி எவ்.கபீலா தலைமையில் நடைபெற்றது.

அதிபர் ஆசிரியர்கள் சமுர்த்திஉத்தியோகத்தர்கள் கிராமசேவை உத்தியோகத்தர்கள் கலாசார உத்தியோகத்தர்கள் கிராமமட்டபெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் செயலமர்வில் கலந்தகொண்டனர்.
அனர்த்தம் மற்றும் அனர்த்தமுகாமைத்துவம் பற்றி இத்தாலியில் பயிற்சிபெற்ற வளவாளர் வி.ரி.சகாதேவராஜா காணொளி உதவியுடன் விளக்கமளித்தார்.
தொடர்ந்து சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் படைப்பிரிவின் அம்பாறை மாவட்ட ஆணையாளர் நௌசாட் வாபி உதவி ஆணையாளர் எம்எஸ்.மிப்ராஸ்கான் ஆகியோர் அனர்த்தத்தில்பாதிக்கப்பட்டவர்களுக்கான முதலுதவி தொடர்பான செய்முறைப்பயிற்சியை வழங்கினார்கள்.













இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -