குறிஞ்சாக்கேணி பாலநிர்மாண நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய பொறியியலாளர் குழு விஜயம்


ஹஸ்பர் ஏ ஹலீம்-
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களால் அண்மையில் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்ட கிண்ணியா குறிஞ்சாக்கேணி பால நிர்மாண நடவடிக்கைகள் தொடர்பாக ஆரம்ப கட்டமாக உரிய இடங்களை இன்று (24) வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிஹால் ரன்ஞன் ஹெட்டியாராச்சி தலைமையிலான பொறியியலாளர் குழுவினர் பார்வையிட்டுள்ளனர்

பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தலைமையில் இடம் பெறவுள்ள இக்குறித்த கடல் மேல்பாலமானது சுமார் 750 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது .வீதி அபிவிருத்தி நெடுஞ்சாலைகள் மற்றும் பெற்றோலிய வள அமைச்சினால் இத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது
இக் களவிஜயத்தில் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் ,பிரதம பொறியியலாளர் திருமதி ஜேசுதாசன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -