மூதூரில் ஒன்பது வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஒரு பிள்ளையின் தந்தை விளக்கமறியலில்!


எப்.முபாரக்-
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒன்பது வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஒரு பிள்ளையின் தந்தையை இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று(17) உத்தரவிட்டார்.
ஆணைச்சேனை,மூதூர் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் ஒன்பது வயதுடைய சிறுமிக்கு நூறு ரூபாய் பணத்தினை கொடுத்து துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரின் அயல் வீட்டில் சிறுமியின் வீடு அமைந்துள்ளதாகவும் சந்தேக நபரின் மகளுடன் தினமும் விளையாடச் செல்வதாகவும் சம்பவ தினம் சந்தேக நபரின் மகள் வீட்டில் இல்லாத நிலையில் நூறு ரூபா பணத்தினை கொடுத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாகவும்,
சிறுமி வீட்டுக்குச் சென்று தனது தாயிடம் விடயத்தை தெரிவித்ததையடுத்து சிறுமியின் பெற்றோர் மூதூர் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய கைது செய்து மூதூர் நீதிமன்ற நீதிவான் வாசஸ்தலம் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
சிறுமி மருத்துவ அறிக்கைக்காக திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -