கிண்ணியா தளவாய் சின்னத்தளவாய் மீள்குடியேற்ற பிரச்சினைக்கான தீர்வு விரைவில்


ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிண்ணியா பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (27)காலை இடம் பெற்ற தருணத்தில் தளவாய் சின்னத்தளவாய் மீள்குடியேற்றம் தொடர்பில் பிரேரனைகளை முன்வைத்து பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது
வனபாதுகாப்பு திணைக்களத்தின் தடையால் உரிய மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மற்றும் வீட்டுத் திட்டங்கள் என்பன பல குளறுபடிகளை ஏற்படுத்தியுள்ளது .
இது விடயமாக மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ..புஷ்பகுமாரவிடம் இது தொடர்பில் இன்றைய தினம் மதியம் உரிய மீள்குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு பிரதியமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்
இக் கலந்துரையாடலின் போது கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்..ஹனி, பிரதியமைச்சரின் இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ், பிரதேச வனபாதுகாப்பு உத்தியோகத்தர் அல்விஸ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டார்கள்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -