திருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மது போதையில் பெண்ணொருவரின் கையைப்பிடித்த நபர் ஒருவரை இம்மாதம் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் விசானி தேனவது இன்று(4) உத்தரவிட்டார்.
அக்போபுர,கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் அக்போபுர பகுதியில் தனிமையில் இருந்த பெண்ணொருவரின் கைப் பாலியல் ரீதியில் மது போதையில் பிடித்திழுத்ததாக தெரிவித்து அப்பெண் அக்போபுர பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை பொலிஸார் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.