மகனே மீண்டுவா!



மகனே மீண்டுவா!
***********************
கண்ணுக்கு கண்ணாய்
உன்னை நான் பார்க்கையில்
இப்படி மண்ணுக்கு 
இரையாக துடிக்கிறாயே!


பத்து மாதம் சுமந்தேன் உன்னை
இப்படி பித்தன் போல பார்க்கவா?
நல்லா இருந்த என் பிள்ளை
இப்படி கல்லாய் போனதென்ன?


பசியோடு உன்னை நான்
பட்டினியாக வைத்ததில்லையே மகனே!
இப்போ பசியே இல்லாம 
சுத்தி திரிகின்றாயே!


மிட்டாய் வாங்கித்தா என்று
அடம்பிடித்தாய் செல்லமாய் அன்று!
இன்று நீ அடம்பிடிப்பது சீரழியவே
என்று ஏன் மகனே உனக்கு புரிகிறதே இல்லை!


உன் தங்கைமார் நாநா என்று
கூப்பிடுமுன் தானா வந்து நிற்பாயே!
இப்படி வீணாய் நீ மாறியதுதான்
புரியவில்லையே!


பள்ளிக்கும்போகும்போது
சொல்லிவிட்டுத்தானே சென்றாய்!
இப்போ சொல்லாமல் கொள்ளாமல் 
ஜெயிலுக்கு போய்வந்து நிற்கின்றாயே மகனே!
அன்பாக தலை தடவி விட்டேன்
இப்படி வம்பை 
வாங்கி வந்து நிற்கின்றாயே!


வீட்டிலே அடைந்து கிடக்காதே
வெளியில் நன்பர்களோடு சென்றுவா என்று
அக்கறையாய் காசும் தந்து
அனுப்பினேனே உன்னை!
இப்போ நீ வீட்டுப்பக்கமும்
திரும்புவதே இல்லையே
தாமதமாய் நடு இரவில் 
திருடன் போல் வீட்டிற்குள் நுழைகிறாயே!


மனம் கொஞ்சம் சோர்வடையும் போது அன்பாய்ப்பேசி
எனக்கு ஆறுதல் தருவாயே!
இப்போ நான் மனநோயாளியாகப்போகிறேன் உன்னால் எங்கே நீ?


உன்னோடு அமர்ந்திருந்து
இரண்டு நிமிடம் பேச 
ஆசையாக இருக்கிறது 
மகனே மீண்டும் நீ பழையபடி
வேண்டும் எனக்கு! 
-மருதமுனை நிஸா -






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -