சி.ஐ.டி.முன் ஆஜராகுமாறு அமைச்சர் ரவி மற்றும் அவரது மனைவிக்கு அழைப்பு..

த்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரத்தில் விசாரணைகளுக்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில், பொய் சாட்சி கூறியமை தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்காக சி.ஐ.டி.முன் ஆஜராகுமாறு அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அவரது மனைவி மெலரின் ஹிரந்தி கருணாநாயக்கவுக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

எதிர்வரும் ஜூலை 7 ஆம் திகதி குற்றப் புலனயவுப் பிரிவின் நிதிக் குற்ற விசாரணை அறை இலக்கம் 2 முன்னிலையில் ஆஜராகி வாக்கு மூலங்களை வழங்குமாறு இதன்போது கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் அவரது மனைவிக்கும் உத்தரவிட்டார்.

இதனைவிட எதிர்வரும் 26 ஆம் திகதி சி.ஐ.டி. முன் ஆஜராகி வாக்கு மூலம் வழங்குமாறு அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மகள் ஒனெலா கருணாநாயக்கவுக்கும் நீதிவான் உத்தரவிட்டார்.

அத்துடன் குளோபல் ட்ரான்ஸ்பொரெஷன் நிறுவனத்துடன் தொடர்புடைய அவசியமான ஆவணங்களை எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கவும் இதன்போது ஒனெலா கருணாநாயக்கவுக்கு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.வீகே

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -