குடி நீர் பிரச்சினைக்கு தீர்வு


ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிண்ணியா பிரதேச செயலக பிரிவின் பெரியாற்று முனை கரையோர பகுதிகளில் உள்ள பகுதிக்கு குடி நீர் இணைப்புக்களை பெறுவதற்கான குழாய் பதிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க இன்று (01) குறித்த குழாய் நீருக்கான ஆரம்ப கட்ட வேலைகளை துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா ஆரம்பித்து வைத்தார்.
மக்களின் நீண்ட கால குடி நீர் பிரச்சினையை தீர்க்கும் முகமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கரையோர வீதியை அண்டிய பகுதிகளில் பிரதான குழாய் பதிக்கப்பட்டன.

இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
இவ் நிகழ்வில் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா, கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டார்கள்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -