கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் பெண்களுக்கென முதலாவது உருவாக்கப்பட்ட பாடசாலையான மட்டக்களப்பு- ஏறாவூர் அல் - முனீறா பெண்கள் மகா வித்தியாலயத்தில் இல்லங்களுக்கிடையிலான கலை, கலாசார போட்டி நிகழ்வுகளின் இறுதிநாள் விழா வெகுகோலாகலமாக நடைபெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்எல்ஏஎம். ஹிஸ்புல்லா இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக்கலந்துகொண்டார்.
பாடசாலை என்எம். மகாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கிழக்கு மாகாண தலைவர் எம்எஸ். சுபைர் மற்றும் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணி;ப்பாளர் டாக்டர் எஸ்எம்எம்எஸ். உமர் மௌலானா மற்றும் பிரதிக்கல்விப்பணி;ப்பாளர்கள் உள்ளிட்ட கல்வியதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இல்லங்களுக்கிடையிலான கலை. கலாசார போட்டி நிகழ்ச்சிகளில் 836 மொத்த புள்ளிகளைப்பெற்றுக்கொண்ட நீல நிற றுக்கையா இல்லம் இவ்வாண்டிற்கான செம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது.
பச்சை நிற ஸைனப் இல்லம் 760 புள்ளிகளையும் சிவப்பு நிற பாத்திமா இல்லம் 706 புள்ளிகளையும் பெற்று முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்றுக்கொண்டன.