பஸ் விபத்தில் 06 பேர் காயம்


க.கிஷாந்தன்-
ருவான்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அவிசாவளை – கேகாலை பிரதான வீதியின் கரவனெல்ல பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 06 பேர் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக ருவான்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து 11.04.2019 அன்று காலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ருவான்வெல்லையிலிருந்து அவிசாவளையில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றுக்கு தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு பயணித்த போது வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததினால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
விபத்தில் பஸ் சாரதி உட்பட 06 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பியுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவான்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -