முன்னாள் அமைச்சர் பைஸர் மீண்டும் அரசியலில்...

ஐ. ஏ. காதிர் கான்-

முன்னாள் மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா, மீண்டும் தீவிர அரசியலில் குதித்துள்ளார். 

இவர், மத்திய கொழும்பு தொகுதிக்கு உட்பட்ட பிரதேசங்களுக்குச் சென்று, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயற்பாட்டாளர்கள், வேட்பாட்டாளர்கள், வாக்காளர்கள் மற்றும் ஆதரவாளர்களைச் சந்தித்துப் பேசி வருகின்றார். இதுதவிர, எதிர்வரும் காலங்களில் மக்கள் சந்திப்புக்களையும் பரந்தளவில் நடத்தத்
திட்டமிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மேற்குத் தொகுதி அமைப்பாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான மாநகர எதிர்க்கட்சித் தலைவர் எச்.எம். மன்ஸில், கொழுப்பு மாநகர சபை உறுப்பினர் துஷார ஹேமந்த (மஞ்சு) ஆகியோரின் ஒத்துழைப்புடன் இச்சந்திப்புக்களை முன்னெடுக்கவுள்ளார்.

முன்னாள் அமைச்சரும் கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்ட ஆலோசகர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராகவும் அரசியல் களத்தில் பழுத்த அனுபவமுடையவராகவும் பிரகாசித்து வரும் நிலையிலேயே, ஜனாதிபதியினால் மீண்டும் இவர், மத்திய கொழும்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -