கல்முனை கல்வி வலய மட்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் சாய்ந்தமருது கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலய மாணவன் அஸ்வர்கான் முஹம்மட் அஸ்ரிப் (தரம் - 06) வெற்றி பெற்று மாகாண மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.
இவர் சாய்ந்தமருதைச் சேர்ந்த எஸ்.அஸ்வர் கான், எம்.எஸ்.அஸீனா தம்பதிகளின் புதல்வராவார். கடந்த வருட புலமைப் பரிசில் பரீட்சையிலும் இவர் பாடசாலையில் (புள்ளி அடிப்படையில்) 2ம் இடத்தை பெற்றுக் கொண்டதுடன் மேலும் பல போட்டிகளிலும் தெரிவாகி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
இவர் மாகாண மட்ட போட்டியிலும் வெற்றி வாகை சூடி தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாக வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் பாடசாலை அதிபர் , பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை பாடசாலை சமூகத்தினர் தெரிவிக்கின்றனர்.