ஒலுவில் துறைமுக கடலரிப்பு தொடர்பான கலந்துரையாடல்

லுவில் துறைமுக நிர்மாணிப்பில் காணிகளை இழந்த மக்களுக்கு நஷ்டஈடுகளை வழங்குதல், மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு பொது வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், கடலரிப்பினால் அழிந்துவரும் ஒலுவில் கிராமத்தை பாதுகாத்தல், அல்ஜாயிஸா பாடசாலை மைதான காணியை பெற்றுக்கொடுத்தல் போன்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் உயர்மட்ட கலந்துரையாடல் இன்று (18) துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் நபீல் அமானுல்லாஹ், பிரதேச சபை உறுப்பினர் அமீன், துறைமுக அதிகார சபையின் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 





  

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -