பாணந்துரை இனமோதல் மூவர் வைத்தியசாலையில்-பொலிசாரின் தலையீட்டில் நிலமை சுமுகமானது.

பாணந்துறை - சரிக்கமுல்ல - திக்கல பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து, அந்த பகுதியில் இன மோதல் ஒன்று ஏற்படும் அச்சம் ஏற்பட்டது.

எனினும் இதன்போது சிறப்பாக செயற்பட்ட பொலிஸார் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரை ஸ்தலத்துக்கு வரவழைத்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதையடுத்தே தற்போது அங்கு சுமுகமான சூழல் ஒன்று நிலவுவுகின்றது.

இந் நிலையில் பிரதேசத்தின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்ய தேவையான பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாகவும், துரதிஷ்டவசமான மோதல் சம்பவம் ஒன்றைத் தவிர வேறு எந்த சம்பவங்களும் அங்கு பதிவாகவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

பாணந்துறை பகுதியில் நேற்றிரவு இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டிருந் நிலையில், பெரும்பான்மை இளைஞர் ஒருவரும் முஸ்லிம் இளைஞர்கள் இருவருமாக மொத்தமாக மூவர் சிறு காயங்களுக்கு உள்ளாகினர்.

இதையடுத்து அவர்கள் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -