துரைவி 88 வது பிறந்த விழாவும், நினைவுப் பேருரையும் துரை விருது வழங்கலும்

02.03.2019 அன்று சனிக்கிழமை மாலை 5.00 மணிக்குக் கொழும்புத் தமிழ்ச் சங்க விநோதன்மண்டபத்தில் நடைபெற்ற துரைவி 88 வது பிறந்த விழாவும், 13வது நினைவுப் பேருரையும் துரை விருது வழங்கல் நிகழ்வில். அந்த நிகழ்வுக்குத் தலைமை வகித்த தெளிவத்தை ஜோசப்அவர்கள் தனது தலைமையுரையில் துரைவி அவர்களின் சிறப்பினை விலாவாரியாக முன் வைத்தார்.
வரவேற்புரையை நிகழ்த்திய மேமன்கவி நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார்.
இந்த நிகழ்வுக்கான நினைவுப் பேருரையைப் பேராதனை பல்கலைக்கழ தமிழ்த்துறை விரிவுரையாளர் எம்.எம். ஜெயசீலன் அவர்கள் மலையகத்தில் பெரிய எழுத்துப் பாரம்பரியமும் சிறுவெளியீடுகளும் எனும் தலைப்பில் சிறப்பான ஒரு நினைவுப் பேருரையை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த மொழிபெயர்ப்பு நூல்களில் சிறந்த நூலாகத் தெரிவு செய்யப்பட்ட உலக நாடுகளைச் சார்ந்த கவிஞர்களின் ஆங்கிலக் கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு நூலான ஜிஃப்ரி ஹாஸனின் '' மூன்றாம் பாலினத்தின் நடனம்'' எனும் நூலுக்கும், 2018 ஆம் ஆண்டு வெளிவந்த ஆய்வு நூல்களில் சிறந்த நூலாகத் தெரிவு செய்யப்பட்ட ,வட-கிழக்கு பிரதேசத்தைச் சார்ந்த பழம்பெரும் பாடசாலைகளின் வரலாற்றைச் சொல்லும்முருகேசு பாக்கியநாதனின் கல்வி கண்திறந்த கோயில்கள்'' எனும் நூலுக்கும் துரைவிவிருதுகளை இலக்கியப் புரவலர் ஹாஸிம் ஒமர் வழங்கினார். முருகேசு பாக்கியநாதன்கனடாவில் வசிப்பதனால் அவருக்கான விருதினை அவரது மகன் பி. கெளரீஸன் பெற்றுக் கொண்டார்.

மு.பொன்னம்பலம் பாராளுமன்ற உறுப்பினர் மல்லிகைப்பு சந்தி திலகர், இரா சடகோபன், ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன், எம். வாமதேவன் ஆகியோர் கருத்துரைகளை வழங்கினார்கள்.
நன்றியுரையை ராஜ்பிரசாத் துரை விஸ்வநாதன் நிகழ்த்தினார்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -