உலக நீர் தினம் - 2019
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ஏற்பாடு செய்திருந்த உலக நீர் தினம் - 2019 தொடர்பான நிகழ்வு வெள்ளிக்கிழமை (22), கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றபோது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இதில் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன, அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ. அன்சார், பிரதித் தலைவர் எம்.எச்.எம். சல்மான், பொது முகாமையாளர் தீப்தி சுமனசேகர உட்பட நாடெங்கிலுமிருந்து வந்திருந்த ஏராளமானோர் பங்குபற்றினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...