உலக காசநோய் தினம் மார்ச் 24 திகதியை முன்னிட்டு திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தினால் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு செவ்வாய்க்கிழமை (26) மாலை 3.30 மணிக்கு நடைபெற்றது
உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காச நோய் பற்றி Dr. சிப்லி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது
உலகளா ரீதியில் 2016 ஆம் ஆண்டு 9 மில்லியன் மக்கள் புதிதாக காசநோய் தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள் என தெரிவித்தார்
திருகோணமலை மாவட்டத்தில் 120 - 130 பேர் ஒவ்வொரு வருடமும் அடையாளப்படுத்தப்பட்டு வருவதாகவும் கடந்த வருடம் 130 பேர் காசநோய் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்தார்
காச நோய் பரம்பரை நோய் கிடையாது, இலகுவிலும் தொற்றக்கூடிய நோய் அல்ல எனவும் காசநோயாளர்கள் தொடர்ச்சியாக ஆறு மாதங்களுக்கு சிகிச்சை பெறுகின்ற போது பூரண குணமடைய முடியும் என மேலும் தெரிவித்தார்.