தென்கிழக்கு பல்கலைக்கழக சுதந்திர ஊழியர் சங்க வருடாந்த பொதுக் கூட்டம்


அஸ்லம் எஸ்.மௌலானா-
தென்கிழக்கு பல்கலைக்கழக சுதந்திர ஊழியர் சங்கத்தின் இரண்டாவது வருடாந்த பொதுக் கூட்டம் நாளை மறுதினம் புதன்கிழமை (28) காலை 10.30 மணிக்கு பல்கலைக்கழக ஊழியர் மேம்பாட்டு மத்திய நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
சங்கத்தின் தலைவர் ஏ எம் அன்வர் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் பிரதம அதிதியாகவும் பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார் கௌரவ அதிதியாகவும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

இலிகிதர் சேவையும் அதனோடு இணைந்த சேவையாளர்களையும் கொண்ட இந்த ஊழியர் சங்கத்தின் உருவாக்கம், அதன் முக்கியத்துவம் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் குறித்த விரிவான கொள்கை விளக்க உரையும் இடம்பெறவுள்ளதாக அதன் தலைவர் ஏ.எம்.அன்வர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -