ஹிஸ்புல்லாஹ்வின் அமைச்சுடன் முஸ்லிம் அலுவல்கள் அமைச்சையும் இணைத்து வர்த்மாணி வெளியிடப்பட்டது

கர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு வழங்கப்பட்ட அமைச்சுப் பொறுப்புக்களுக்கு மேலதிகமாக முஸ்லிம் அலுவல்கள் அமைச்சும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய விசேட வர்த்தமாணி மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்களின் அமைச்சுப் பொறுப்புக்கள் சம்பந்தமான விசேட வர்த்மாணி அறிவித்தல் கடந்த 09ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அதற்கமைய நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் அமைச்சுப் பொறுப்புக்களின் கீழ் முஸ்லிம் சமய, கலாச்சார அலுவல்கள் திணைக்களம், தேசிய சமுதாய நீர்வழங்கல் திணைக்களம் மற்றும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஆகிய முக்கிய திணைக்களங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இதற்கமை நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் முஸ்லிம் அலுவல்கள் அமைச்சராக ஹிஸ்புல்லாஹ் தொடர்ந்து பணியாற்றவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -