சமூக பிரஜைகளுக்கான கைபேசி கதையாக்கம் (MoJo)இலவசப்பயிற்சி கண்டியில் ஆரம்பிக்கப்பட்டது.
“ஊடகத்துறையின் வளர்ச்சியில் கையடக்கத் தொலைபேசியானதுமிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது. கைபேசி ஊடகவியலானதுஓரங்கட்டப்பட்ட மக்களின் குரல்களை மற்றும் அவர்களதுபிரச்சினைகளை வெளியில் கொண்டு வருவதற்கான சிறந்தகருவியாகும்.
இது பாதிக்கப்பட்ட மக்களை ஆட்சியில் பங்குபற்ற வைப்பதோடு, தீர்மானமெடுக்கும் செயல்முறையிலும் தாக்கத்தைஏற்படுத்துகின்றது.
இலங்கை போன்ற நாடுகளில் கைபேசிஊடகவியல் பயிற்சியானது அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்”என பேராசிரியரும் இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர்மன்றத்தின் தவிசாளருமான பத்மசிறீ வணிகசுந்தர அண்மையில்கண்டியில் இடம்பெற்ற இளம் ஊடகவியலாளர்கள் மற்றும் மனிதஉரிமை ஆர்வளர்களுக்கான Mobilie storytelling (MoJO)பயிற்சிப்பட்டறையில் தெரிவித்தார்.
இப்பயிற்சிப்பட்டறையில் திருகோணமலை, யாழ்ப்பாணம் மற்றும்மாத்தறை மாவட்டங்களிலிருந்து மூவினத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 30 இளம் ஊடகவியலாளர்களும் மனிதஉரிமை ஆர்வலர்களும் பங்கு பற்றினர்.
இப்பயிற்சியின் போது பங்குபற்றுனர்களுக்கு படக்காட்சிகளின்வகைகள், நேர்காணலை படம் பிடிக்கும் உத்திகள்,கைத்தொலைபேசியைப் பயன்படுத்தி காட்சிகளைப் பதிவு செய்தல், new mobile apps, Editing, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம்செய்தல் போன்ற தலைப்புக்களில் நடைமுறைப் பயிற்சிகள்வழங்கப்பட்டன.
பேராசிரியர் பத்மசிறீ வணிகசுந்தர மேலும் உரையாற்றுகையில், இந்தப்புதிய முயற்சியின் நோக்கமானது, துடிப்பான இளம் ஊடகவியலாளர்களை கைப்பேசி ஊடகவியல் துறையில்பயிற்றுவிப்பது, அவர்களின் மூலம் ஓரங்கட்டப்பட்ட மக்களின்பிரச்சினைகளை ஆதாரபூர்வமாக ஆவணப்படுத்துவது, அவற்றைப்பொறுப்பான அதிகாரிகளுடன் சமர்ப்பிதன் மூலம்அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தேவையானகலந்துரையாடல்களை ஏற்படுத்திக் கொடுப்பது என்பனஉள்ளடங்குகின்றன.
எமது நிறுவனத்தின் குறிக்கோள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் இவ்வாறான இளைஞர் குழுக்களை உருவாக்குவதாகும். அந்தவகையில், தற்போது நீலன் திருச்செல்வம் அறக்கட்டளைஅனுசரணையுடன் 3 மாவட்டங்களில் இந்த செயல் திட்டத்தினை ஆரம்பித்துள்ளோம். இது ஏனைய மாவட்டங்களுக்கும் மிக விரைவில்விஸ்தரிக்கப்படவுள்ளது. இதன் மூலமாக நாட்டின் அபிவிருத்திக்குத்தேவையான பங்களிப்பைச் செய்ய முடியுமென எமது நிறுவனம்உறுதியாக நம்புகின்றது எனக்கூறினார்.
இந்தப்பயிற்சியின் நிறைவில் பயிற்றப்பட்ட இளம்ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர் மன்றத்தின் தொழிநுட்ப வழிகாட்டலின்கீழ் 30 கதைகளை உருவாக்கவுள்ளனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு Mojo.Lk மற்றும் www.Ldjf.orgஎன்ற வலைத்தளத்தை நாடவும்.
இப்பயிற்சிப்பட்டறையில் திருகோணமலை, யாழ்ப்பாணம் மற்றும்மாத்தறை மாவட்டங்களிலிருந்து மூவினத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 30 இளம் ஊடகவியலாளர்களும் மனிதஉரிமை ஆர்வலர்களும் பங்கு பற்றினர்.
இப்பயிற்சியின் போது பங்குபற்றுனர்களுக்கு படக்காட்சிகளின்வகைகள், நேர்காணலை படம் பிடிக்கும் உத்திகள்,கைத்தொலைபேசியைப் பயன்படுத்தி காட்சிகளைப் பதிவு செய்தல், new mobile apps, Editing, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம்செய்தல் போன்ற தலைப்புக்களில் நடைமுறைப் பயிற்சிகள்வழங்கப்பட்டன.
பேராசிரியர் பத்மசிறீ வணிகசுந்தர மேலும் உரையாற்றுகையில், இந்தப்புதிய முயற்சியின் நோக்கமானது, துடிப்பான இளம் ஊடகவியலாளர்களை கைப்பேசி ஊடகவியல் துறையில்பயிற்றுவிப்பது, அவர்களின் மூலம் ஓரங்கட்டப்பட்ட மக்களின்பிரச்சினைகளை ஆதாரபூர்வமாக ஆவணப்படுத்துவது, அவற்றைப்பொறுப்பான அதிகாரிகளுடன் சமர்ப்பிதன் மூலம்அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தேவையானகலந்துரையாடல்களை ஏற்படுத்திக் கொடுப்பது என்பனஉள்ளடங்குகின்றன.
எமது நிறுவனத்தின் குறிக்கோள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் இவ்வாறான இளைஞர் குழுக்களை உருவாக்குவதாகும். அந்தவகையில், தற்போது நீலன் திருச்செல்வம் அறக்கட்டளைஅனுசரணையுடன் 3 மாவட்டங்களில் இந்த செயல் திட்டத்தினை ஆரம்பித்துள்ளோம். இது ஏனைய மாவட்டங்களுக்கும் மிக விரைவில்விஸ்தரிக்கப்படவுள்ளது. இதன் மூலமாக நாட்டின் அபிவிருத்திக்குத்தேவையான பங்களிப்பைச் செய்ய முடியுமென எமது நிறுவனம்உறுதியாக நம்புகின்றது எனக்கூறினார்.
இந்தப்பயிற்சியின் நிறைவில் பயிற்றப்பட்ட இளம்ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர் மன்றத்தின் தொழிநுட்ப வழிகாட்டலின்கீழ் 30 கதைகளை உருவாக்கவுள்ளனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு Mojo.Lk மற்றும் www.Ldjf.orgஎன்ற வலைத்தளத்தை நாடவும்.
