கடல் மேல் பறக்க வைத்தான் (கவிதை)


கடல் மேல் பறக்க வைத்தான்
+++++++++++++++++++
Mohamed Nizous

கடல் மேல் பறக்க வைத்தான் -கணவனை
கட்டாரில் உழைக்க வைத்தான்
சவுதியில் பிழைக்க வைத்தான் - மனைவியை
அவதியில் திளைக்க வைத்தான்
அவதியில் திளைக்க வைத்தான்

கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை
கனவைச் சுமந்தவள் இங்கே...ஏ
அனல் தரும் சூட்டில் அரபியின் நாட்டில்
கணவன் வாடுவான் அங்கே..ஏ
இருந்து வருவான் வருந்திப் போவான்
இளமை வீணாய்க் கழியும்
ஒரு ஆண் பெண்ணின் உறவை நினைத்து 
உள்ளம் உள்ளே உடையும்...

கடன் சுமை நடுவே வெளிநாடு போவார்
கடும் பொறுப்பாலும் போவார்
தனியாய் சமைத்து தனியாய் துவைத்து
பனியாய்க் கரையும் ஆசை.
ஸ்கைப்பில் உறவும் இண்டனெட் சிரிப்பும்
எவ்வளவு தூரம் ஆற்றும்
உழைத்து அனுப்பும் ரியாலும் தினாரும்


ஊரார் நினைப்பில் சுலபம்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -