20 வது கொடகே தேசியச் சாகித்திய விழா

20 வது கொடகே தேசியச் சாகித்திய விழா எதிர்வரும் செப்டம்பர் 06ந்திகதி கொழும்பில் இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெறும்.

இவ்விழாவில் 2017 ஆம் ஆண்டு இலங்கையில் வெளிவந்த மும்மொழிகளிலும் வெளிவந்த பல்துறை சார்ந்த சிறந்த நூல்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இவ்விழாவில் வாழ்நாள் சாதனைக்கான விருதுகளைப் பேராசிரியர் சோமரத்ன பாலசூரிய, காப்பிக்கோ ஜின்னாஹ் ஷெரீபுதீன், பேராசிரியர் கமனி ஜயசேகர ஆகியோர் பெற்றுக் கொள்வார்கள்.

அத்தோடு சிறப்புரைகளும் இடம் பெறும்.

நாட்டின் மும்மொழி சார்ந்த சகல கலை இலக்கியவாதிகளும் கலந்துக் கொள்ளுமாறு அன்புடன் கொடகே தேசிய சாகித்திய விழா குழுவினர் கௌரவத்துடன் அழைப்பு விடுத்துள்ளார்கள்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -