பதுளையில் பஸ் விபத்து - 13 வயதுடைய சிறுவன் உயிரிழப்பு - 34 பேர் படுங்காயம் - 3 பேர் கவலைக்கிடம்

க.கிஷாந்தன்-
ந்தேகெதர பகுதியிலிருந்து பதுளையை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று பதுளை - கந்தேகெதர பிரதான வீதியில் அலுகொல்ல பகுதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் 13 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதோடு, 34 பேர் படுங்காயம்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தேகெதர பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு பதுளை பகுதிக்கு சென்ற குறித்த பஸ் 27.08.2018 அன்று காலை 8 மணியளவில் பாதையை விட்டு விலகி சுமார் 75 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் பஸ்ஸில் பயணித்த 34 பேர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இதில் மூன்று பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வாகனம் ஒன்றிக்கு இடமளிக்கும் போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்த 34 பேர் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இவ்விபத்து தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -