அவ்வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இறை அச்சம், சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுப்பு போன்ற நல்ல பல அம்சங்களை புனித நோன்பு நமக்கு கற்றுத் தந்துள்ளது. இவற்றின் மூலம் நாம்பக்குவப் படுத்தப் பட்டுள்ளோம். இந்தப் பக்குவம் தொடர்ந்து இருக்க வேண்டும். அதன் மூலம் இறை அன்பையும் அருளையும் நாம்பெற்றுக் கொள்ள முடியும்.
நம் நாட்டை பொறுத்தவரை அண்மையில் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு, கலவரம் போன்றவேற்றாலும் உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்கள் உள்நாட்டு யுத்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்களாலும் இப்பெருநாள் தினத்தை சந்தோசமாக கொண்டாட முடியாதவர்களாக உள்ளனர் எனவே அவர்களையும் எமது துஆவில் சேர்த்துக்கொள்வோம்.
மேலும் நோன்பு காலத்தில் நாம் பெற்றுக்கொண்ட பயிற்ச்சி நெறிகளை கொண்டு நாட்டில் இன நல்லிணக்கம், சமத்துவம் நீடிப்பதற்கும் முஸ்லிம்களாகிய நாம் எச்சந்தர்பத்திலும் ஒற்றுமையாக இருப்பதுக்கும் இத்திருநாளில் அனைவரும் பிராத்தனை செய்ய வேண்டும்.