நோன்பு காலத்தில் பெற்ற பயிற்சிகள் வாழ்நாளில் தொடர வேண்டும் – இம்ரான் MP


முஸ்லிம்கள் நோன்பு காலத்தில் பெற்ற பயிற்சிகள் வாழ்நாளில் தொடர வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் விடுத்துள்ள நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இறை அச்சம், சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுப்பு போன்ற நல்ல பல அம்சங்களை புனித நோன்பு நமக்கு கற்றுத் தந்துள்ளது. இவற்றின் மூலம் நாம்பக்குவப் படுத்தப் பட்டுள்ளோம். இந்தப் பக்குவம் தொடர்ந்து இருக்க வேண்டும். அதன் மூலம் இறை அன்பையும் அருளையும் நாம்பெற்றுக் கொள்ள முடியும்.

நம் நாட்டை பொறுத்தவரை அண்மையில் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு, கலவரம் போன்றவேற்றாலும் உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்கள் உள்நாட்டு யுத்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்களாலும் இப்பெருநாள் தினத்தை சந்தோசமாக கொண்டாட முடியாதவர்களாக உள்ளனர் எனவே அவர்களையும் எமது துஆவில் சேர்த்துக்கொள்வோம்.

மேலும் நோன்பு காலத்தில் நாம் பெற்றுக்கொண்ட பயிற்ச்சி நெறிகளை கொண்டு நாட்டில் இன நல்லிணக்கம், சமத்துவம் நீடிப்பதற்கும் முஸ்லிம்களாகிய நாம் எச்சந்தர்பத்திலும் ஒற்றுமையாக இருப்பதுக்கும் இத்திருநாளில் அனைவரும் பிராத்தனை செய்ய வேண்டும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -