தேசிய வாக்காளர் தினத்தையொட்டிய தேசிய நிகழ்வு இன்று ( 23) சாய்ந்தமருதில் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆ பெரியபள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்றபோது தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பிரதம அதிதியாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் கலாநிதி ரத்னஜீவ எச் ஹுக் , உதவி தேர்தல்கள் ஆணையாளர்களானஎம்.எம்.முஹம்மட் , டீ.ரீ.ஐ.விக்ரமரெட்ன , சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் ,கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் , பிரதேச செயலாளர்கள் , அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் , பிரதேச செயலக உத்தியோஸ்தர்கள் , சமூர்த்தி உத்தியோஸ்தர்கள் , வர்த்தக சங்க பிரதிநிதிகள் , பாடசாலை அதிபர்கள் , உலமாக்கள் , புத்திஜீவிகள் , கல்வியலாளர்கள் , மீனவர்கள் ,விவசாயிகள், பெண்கள் , இளைஞர்கள் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.
மாளிகைக்காட்டில் இருந்து ஆரம்பமான வரவேற்பு ஊர்வலம் சாய்ந்தமருது – கல்முனை பிரதான வீதியினூடாக சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் முன்றலை அடைந்தது.
பாண்ட் வாத்தியம் , கடற்படை மரியாதை , பொல்லடி போன்ற பலவிதமான நிகழ்வுகளுடன் அதிதிகள் வரவேற்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்படும் போது வீதியின் இருமருங்கிலும் நின்ற மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். எந்தவிதமாக அரசியில் வாதிகளும் அழைக்கப்படாத நிலையில் மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்ற மேற்படி நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச மக்களை தேசிய ரீதியில் கௌரவப்படுத்தும் நிகழ்வாக அமையப் பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.