கிழக்கு ஆளுநரின் பெருநாள் வாழ்த்து செய்தி


அப்துல்சலாம் யாசீம்-
றை உணர்வு தொடர்ந்திருக்க வேண்டுமென வாழ்த்துகிறேன்
புனித ரமலான் காலத்தில் முஸ்லிம் மக்களிடம் நிறைந்திருந்த இறை உணர்வு வாழ்வில் தொடர்ந்திருக்க வேண்டுமென வாழ்த்துகிறேன் என கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

முஸ்லிம் மக்கள் இறைவனின் கட்டளைப்படி ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருக்கின்றனர். இதனால் அடுத்தவரின் உணர்வுகளை அவர்கள் புரிந்து கொள்கின்றனர். எனவே தான் இம்மாதத்தில் ஏழைகளுக்கு அதிகமதிகம் அவர்கள் வாரி வழங்குகின்றனர்.
இரவு, பகல் பாராது நிறைந்த வணக்க வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் இறை அன்பை பெற்றுக் கொள்கின்றனர். இதனால் நேர்மையான வாழ்க்கையை அவர்கள் வாழ்கின்றனர்.
இறைவனின் கட்டளையை ஏற்று செயல் படும் முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு உரிய வாய்ப்பை வழங்குவதற்காத தான் அரசு ரமலான் காலத்தில் முஸ்லிம் ஊழியர்களுக்கு விசேட விடுமுறைகளை வழங்கி வருகின்றது.
இந்த சலுகையை பயன் படுத்தி அதிகமான அரச ஊழியர்கள் இறை தியானங்களில் ஈடுபட்டுவருவதை நான் அறிவேன். இந்த தியான நிலை ரமலான் அல்லாத காலத்திலும் சகலரிடமும் நீடிக்க வேண்டும். இதன் மூலம் அனைவரும் விரும்பக் கூடிய நாள் வாழ்வு வாழ முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -