தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தல் ஆணையகத்தினால் விழிப்புணர்வு செயலமர்வு கல்முனை வெஸ்லி உயர்தரப்பாடசாலை மண்டபத்தில்(22) இடம்பெற்றது .
இவ் நிகழ்வானது தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்ன ஜீவன் எச்.கூல் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்விக்கு பிரதம அதிதியாக மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.முகம்மட் கலந்து சிறப்பித்தார்.
மற்றும் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் மற்றும் கல்முனை முஸ்லிம் பிரிவு பிரதேச செயலாளர் முகம்மட் கனி மற்றும் தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் லவநாதன் மற்றும் , திணைக்களங்களின் தலைவர்கள்,உயர் அதிகாரிகள் ,பொதுமக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.