அட்டாளைச்சேனை ஜெமீலா பெருநாள் வாழ்த்துகள்


மேலான பேரிறைவனாம் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் புனித நோன்பு கடமைகளை நிறைவேற்றி அகமெங்கும் இன்பமுற இனிய நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் அன்புச் சகோதர, சகோதரிகள், ஆதரவாளர்கள், இஸ்லாமிய உள்ளங்கள் அனைவருக்கும் இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பூரிப்படைகின்றேன்.

இஸ்லாம் முழு மனித வாழ்வையும் செம்மைப்படுத்தும் ஒரு வாழ்க்கை நெறி என்பதில் ஐயமில்லை. மனிதனைப் புனிதனாக்கும் இறை செயல்களில் ஒன்றுதான் நோன்பாகும். சுமார் ஒரு மாதகாலம் நோன்பிருப்பதனூடாக பகலெல்லாம் பசித்திருந்து இரவுகளில் நின்று வணங்கி , ஐம்புலன்களையும் அடக்கி, ஏழை எளியோரின் பசியுணர்ந்து அவர்களுக்கு வாரி வழங்கி இறை திருப்தியைப் பெற்றுக் கொள்வதே எம் எதிர்பார்;ப்பாகும்.

இந்த இனிய நன்நாளிலே உறவுகளோடு சங்கமித்து நட்புகளைப் பேணி, விட்டுக் கொடுப்புடன் இன, மத, மொழி, பால் ரீதியிலான வேறுபாடுகளை மறந்து வாழ்வதில்தான் எம் வாழ்வின் இலட்சியமும் இஸ்லாத்தின் குறிக்கோளும் உள்ளது.
எனவே, இன்று போல் என்றும் நலன்கள் மேலோங்க புத்தெழுச்சி பெற்று நாமும் நாடும் நலன் பெற எம் வட்டாரத்தின் வளம் பெருக இறைவனை இத்தருணத்தில் பிரார்த்திக்கின்றேன்.

நன்றி
ஹமீட் ஜெமீலா
பிரதேச சபை உறுப்பினர்,
அட்டாளைச்சேனை
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -