பயிற்சி முடிந்துள்ளது; பணி துவங்க வேண்டும்!
ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.
தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்... ஈத் முபாரக்!சிறப்பு மிக்க இந்நாளிலே குடும்ப அங்கத்தவர்கள், இரத்த உறவுகள், மார்க்க உறவுகள், மனித உறவுகள், நண்பர்கள், அயலவர்கள் என முடியுமான அனைவருடனும் மகிழ்ச்சி, அன்பு, சகோதரத்துவம் என்பவற்றைப் பரிமாறி குதூகலமாக இருக்கவும், முடியாதவர்களுக்காக துஆ செய்து அவர்களது நலன்களில் பங்கெடுக்கவும் அல்லாஹ் எமக்கு அருள் புரிவானாக! என்ற பிரார்த்தனையுடன்...
எமது கொண்டாட்டங்கள், விளையாட்டுக்கள், பொழுதுபோக்குகள் இஸ்லாத்துக்கு உடன்பாடானதாகவும் அடுத்த சமூகத்தவர்களை அசௌகரியப்படுத்தாததாகவும் ஆக்கிக் கொள்ளுமாறும் வேண்டுகிறோம்.
இந்நாளின் எமது உச்ச கட்ட மகிழ்ச்சி அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடுவது போல...
“...தக்பீர் சொல்லுங்கள். அல்லாஹ் உங்களுக்கு வாழும் வழியை (ஹிதாயத்தை) காட்டினான் என்பதற்காக...” என்பதே ஆகும்.
ரமழானில் அல்குர்ஆனை இறக்கி சிறந்ததொரு வாழ்க்கை முறையை உலகுக்கு காட்டித் தந்தமைக்காக நன்றி கூறும் பெருநாளையே நாம் கொண்டாடுகிறோம் என்பதை நாம் மறந்துவிட முடியாது.
அந்த வகையில் அல்குர்ஆன் கூறும் வாழ்க்கை முறையை, அதன் அனைத்துப் பக்கங்களோடும் கற்று வாழ்வதற்கான பயிற்சியையே ரமழான் தந்துவிட்டுச் செல்கிறது. இனி, நாம் அந்தப் பயிற்சியின் பயனை அனுபவிக்கத் துவங்க வேண்டும். அந்த வாழ்க்கைதான் அனைவரதும் உலக, மறுமைப் பிரச்சினைகளைத் தீர்க்க வல்லது. என்பதை எமது சொந்த வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி உலகிற்கும் அதனை உணர்த்த வேண்டும். நாம் வாழும் தேசத்தினதும் தேச மக்களினதும் பல்வேறு பிரச்சனைகளை அவர்களோடிணைந்து அதன் வழிகாட்டலில் தீர்க்க வேண்டும்.
பயிற்சி முடிந்துள்ளது. பணி துவங்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளில் எமது கவனத்தைக் குவிப்போம்; செயல்படுவோம், இன்ஷா அல்லாஹ்.
--
ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
தலைவர்,
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
--
ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
தலைவர்,
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி