-அப்துல் அஸீஸ், மனித உரிமைகள் ஆணைக்குழு இணைப்பதிகாரி-
ஒவ்வொரு ஆண்டும் 5 இலட்சம் பெண்களுக்கு மேல் ஏறத்தாள ஒரு நிமிடத்திற்கு ஒரு பெண் கர்ப்ப காலத்திலும். பிரசவ சிக்கல்களாலும் இறக்கிறார்கள். சித்திரவதைகளை இல்லாதொழித்து மனித உரிமைகள் கலாச்சாரத்தை மேம்படுத்த வேண்டியது பகிரங்கசேவையாளர்களி;ன் கடமையிலான பணியாகும் என அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.சர்வதேச சித்திரவதைகளுக்கெதிரான தினத்தையொட்டி மட்டக்களப்பு தாதிய கல்லூரியில் தாதிய உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி இன்று 26.06.2018 மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தலைமையில்;; இடம்பெற்றது. உள நல வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி ரி.. கடம்பநாதன் அவர்களும் வளவாளராக கலந்து கொண்டார். ஆணைக்குழு இணைப்பாளர் அஸீஸ் மேலும் கருத்துத்தெரிவிக்கும்போது,
வறுமையில் வாடும் பெண்களின் எண்ணிக்கையும், நோயாளியாக ஓய்வெடுக்க முடியாமல் குடும்பச் சுமைகளை சுமந்து, சுமாரான வாழ்க்கை வாழும் பெண்ககளைப் பற்றி நாம் அக்கறை கொள்ள வேண்டும். உழகில் ஏழையாக இருக்கின்ற வயது வந்த மக்கள் தொகையில் மூன்றுக்கு இரண்டு பேர் பெண்கள். அத்துடன் உலகில் மூன்றில் இரண்டு பங்கு வேலையை பெண்கள் செய்கிறார்கள்.
இவ்வாறு இருக்கின்ற போது, பெண்ணானவள் கருவையும் சுமக்க வேண்டியவளாக இருக்கிறாள். இக்கற்ப காலத்தில் அதிகளவிலான உடல், உடலியல் ரீதியான வேதனைகளை அனுபவிக்கும் போது, வைத்தியசாலைக்கு செல்லவேண்டிய தேவை ஏற்படுகிறது.
இவ்வாறு வருகின்ற கற்பிணித் தாய்மார்களை மருத்துவத் தாதிகள் மிகவும் கவனத்துடன் இவர்களது வேதனைகளைப் புரிந்து கொண்டு நடாத்த வேண்டும். இவ்வாறில்லாது இந்த தாய்மார்கள் மீது சீறிப்பாய்வதோ அல்லது கவலையீனமாக கவனிக்காமல் விடுவதோ சட்டப் பிரச்சினையை தோற்றுவிக்கும் என்பதுடன் எந்த நோயாளிக்கும் ஏசுவதற்கு எவருக்கும் உரிமை இல்லை என்பதையும் மனதிற் கொள்ள வேண்டும் எனவும்,
ஒரு நோயாளி அவருக்கான நோயின் தன்மை பற்றி அறிந்து கொள்ள உரிமை இருக்கிறது. இதுமட்டுமின்றி, அவரது நோய் சம்பந்தமாக செய்யப்பட்ட பரிசோதனை அறிக்கைகளின் முடிவையும் அறிந்து கொள்ளலாம். இதனை எந்தத் தாதியர்களும் கொச்சைப்படுத்தல் கூடாது. அத்துடன் நோயாளியின் நோய் பற்றிய இரகசியத் தன்மையினைப் பேணுவதும் முக்கியமான கடமைகளில் ஒன்றாகும்.
பொதுவாக கடமை நேரத்தின் போது எத்தனையோ தாதியர்கள் நோயாளிகளை இம்சைக்குள்ளாக்கிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுவும் கற்பிணித் தாயின் பிரசவ நேரத்தின் போது, தகாத வார்த்தைகளை பிரயோகித்து மிகவும் கடினமாக நடந்து கொள்கிறார்கள் என எத்தனையோ தாய்மார் சொல்வதை கேட்டிருக்கிறோம். ஆனால் தனியார் வைத்தியசாலைகளில் காட்டப்படும், ஆதரவினால் கூடிய பணங்களைச் செலவழித்து மக்கள் நாடிச் செல்கின்ற விடயமானது கவலைக்குரியது.
ஒரு நோயாளி ஒரு வைத்தியசாலைக்கு எத்தனை தடவை வந்துள்ளார்; என்பது முக்கியமல்ல. அவரின் நோய் வைத்தியசாலையின் மூலம் குணப்படுத்தப்பட்டுள்ளதா என்பதையே மருத்துவத் துறையினர் கவனத்திற் கொள்ள வேண்டும் என மேற்கண்டவாறு அஸீஸ் தெரிவித்தார்.