மூன்றாம் உலகப் போருக்கு ஊடகத்துறை வித்திட்டுள்ளது - கல்முனை மின் பொறியியலாளர் பர்ஹான்


றியாத் ஏ. மஜீத்-
மூன்றாம் உலகப் போகுக்கு இன்று ஊடகத்துறை வித்திட்டுள்ளது என கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் எந்திரி எம்.ஆர்.எம்.பர்ஹான் தெரிவித்தார்.
டாக்டர் நாகூர் ஆரிப் எழுதிய " முகநூலில் நான் " எனும் நூல் வெளியிட்டு நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் அங்கு உரையாற்றுகையில்,

முதலாம் உலகப் போரில் பல இலட்சக் கணக்கான உயிர்கள் கொள்ளப்பட்டன. இரண்டாம் உலகப் போரில் தொழில் நுட்பங்கள் கூடிய நவீன ரக ஆயுதங்களை பயன்படுத்தி நாடுகளுக்கிடையில் யுத்தம் நடைபெற்றது.
இதில் குறிப்பாக இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா அணு ஆயுதத்தைப் பயன்படுத்தி ஜப்பான் நாட்டை தாக்கிய கொடூர நிகழ்வு இன்றும் கூட அந்த நாடு அதன் விளைவை அனுபவித்து வருவதை நாம் அறிவோம்.

இன்று உலகில் மூன்றாம் உலகப் போர் இடம்பெற்று வருகின்றது எனக் கூறப்படுகின்றது. இப்போர் எங்கே, எவ்வாறு இடம்பெறுகின்றது எனக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

உலகில் மூன்றாம் உலகப் போர் மூழ்வதற்கு இன்று ஊடகத்துறை மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக வித்திடப்பட்டுள்ளது என்பதை நாம் இன்னும் உணரவில்லை. அந்தளவுக்கு சமூக வலைத்தளங்கள் இன்று எம் எல்லோரையும் ஆட்கொண்டுள்ளது.
எமது நாட்டின் அடுத்த ஜனாதிபதியை மக்கள் தெரிவு செய்துவிட்டனர் என நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கூறுகின்றார். இத்தெரிவினை அவர் இன்று சமூக வலைத்தளங்களில் மக்களின் அபிப்பிராயத்தை வைத்தே கூறியிருக்கின்றார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -