சாய்ந்தமருது-
அரசியலில் காலடிவைத்து குறுகிய காலத்துக்குள் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ள வீசி இஸ்மாயில் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு இன்னும் இருக்கின்ற குறுகிய காலத்துக்குள் இப்பதவியின் பலனை முழுமையாக அடைவதென்றால் அவருக்கு பிரதி அமைச்சர் பதவி வழங்கப்படல் வேண்டும்.
முதல் அமர்வில் எதிர்க்கட்சி உறுப்பினர்களாலும் வாழ்த்துக்கள் தெரிவிக்கின்ற சம்பிரதாயத்துக்கு மாற்றமாக முன்னாள் உபவேந்தருக்கு இன்றைய உயர்கல்வி அமைச்சரின் பாராளுமன்ற உரையினை சாதாரணமாக கொள்ள முடியாது.
கடந்த பொதுத்தேர்தலில் 33 ஆயிரம் வாக்குகளைப்பெற காரணமாக இருந்தவருக்கு இந்த பதவி வழங்கப்படாவிட்டால், கட்சி தாவிவிடுவார் என்ற அச்சுறுத்தல் காரணமாகவே அமைச்சர் றிசாத் வீசி இஸ்மாயிலை தெரிவு செய்தாரென்று கூறப்படுகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் ஏற்கனவே நான்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கத்தக்கதாக ஐந்தாவது உறுப்பினராகவும், அதிலும் சம்மாந்துறை கிராமத்தில் ஓர் முஸ்லிம் உறுப்பினர் இருக்கத்தக்கதாகவும் வீசி இஸ்மாயில் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏட்டிக்கு போட்டியான அரசியலை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகின்றது. அதாவது பலமான நிலையில் உள்ள முஸ்லிம் காங்கிரஸ் கோட்டையை தகர்ப்பதற்கான நடவடிக்கையாகவே இந்த பதவி அம்பாறை மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
உண்மையில் மக்கள் நலனை கருத்தில்கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்குவதாக இருந்தால், முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழுகின்ற மாவட்டத்துக்கு வழங்கியிருக்கலாம்.
அரசியலில் காலடிவைத்து குறுகிய காலத்துக்குள் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ள வீசி இஸ்மாயில் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு இன்னும் இருக்கின்ற குறுகிய காலத்துக்குள் இப்பதவியின் பலனை முழுமையாக அடைவதென்றால் அவருக்கு பிரதி அமைச்சர் பதவி வழங்கப்படல் வேண்டும்.
முதல் அமர்வில் எதிர்க்கட்சி உறுப்பினர்களாலும் வாழ்த்துக்கள் தெரிவிக்கின்ற சம்பிரதாயத்துக்கு மாற்றமாக முன்னாள் உபவேந்தருக்கு இன்றைய உயர்கல்வி அமைச்சரின் பாராளுமன்ற உரையினை சாதாரணமாக கொள்ள முடியாது.
கடந்த பொதுத்தேர்தலில் 33 ஆயிரம் வாக்குகளைப்பெற காரணமாக இருந்தவருக்கு இந்த பதவி வழங்கப்படாவிட்டால், கட்சி தாவிவிடுவார் என்ற அச்சுறுத்தல் காரணமாகவே அமைச்சர் றிசாத் வீசி இஸ்மாயிலை தெரிவு செய்தாரென்று கூறப்படுகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் ஏற்கனவே நான்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கத்தக்கதாக ஐந்தாவது உறுப்பினராகவும், அதிலும் சம்மாந்துறை கிராமத்தில் ஓர் முஸ்லிம் உறுப்பினர் இருக்கத்தக்கதாகவும் வீசி இஸ்மாயில் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏட்டிக்கு போட்டியான அரசியலை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகின்றது. அதாவது பலமான நிலையில் உள்ள முஸ்லிம் காங்கிரஸ் கோட்டையை தகர்ப்பதற்கான நடவடிக்கையாகவே இந்த பதவி அம்பாறை மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
உண்மையில் மக்கள் நலனை கருத்தில்கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்குவதாக இருந்தால், முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழுகின்ற மாவட்டத்துக்கு வழங்கியிருக்கலாம்.
அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களோடு ஒப்பிடுகையில் உட்கட்டமைப்பிலும், கல்வி, சுகாதார மற்றும் பொருளாதார அபிவிருத்தியில் 3௦ வருடங்கள் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்ற பல மாவட்டங்கள் உள்ளன.
அதிலும் குறிப்பாக 90 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்கள் இன்னும் பூரணமாக மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. அவர்களது மீட்கப்படாத காணிகள் இன்னும் உள்ளன.
அதிலும் குறிப்பாக 90 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்கள் இன்னும் பூரணமாக மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. அவர்களது மீட்கப்படாத காணிகள் இன்னும் உள்ளன.
அவ்வாறான முஸ்லிம் மக்களின் நலன்களை கவனத்தில் கொள்ளாது தங்களது தனிப்பட்ட அரசியல் சுயநலனை மட்டுமே முன்னிலைப்படுத்தி இந்த பதவியினை அமைச்சர் ரிசாத் வழங்கியுள்ளார்.
அதாவது எதிர்வரும் காலங்களில் நடைபெற இருக்கின்ற மாகாணசபை மற்றும் பொது தேர்தல் ஆகியவற்றினை முஸ்லிம் காங்கிரஸ் கோட்டைக்குள் அதிகாரத்துடன் எதிர்கொள்ளும் நோக்கோடுதான் இந்த பதவி வீசி இஸ்மாயிலுக்கு வழங்கப்பட்டுள்ளதே தவிர, எந்தவித மக்கள் நலனும் இங்கே கண்டுகொள்ளப்படவில்லை.
அதாவது எதிர்வரும் காலங்களில் நடைபெற இருக்கின்ற மாகாணசபை மற்றும் பொது தேர்தல் ஆகியவற்றினை முஸ்லிம் காங்கிரஸ் கோட்டைக்குள் அதிகாரத்துடன் எதிர்கொள்ளும் நோக்கோடுதான் இந்த பதவி வீசி இஸ்மாயிலுக்கு வழங்கப்பட்டுள்ளதே தவிர, எந்தவித மக்கள் நலனும் இங்கே கண்டுகொள்ளப்படவில்லை.