ஏ.எல்.எம்.நசீர் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் நோன்புப் பெருநாள் வாழ்த்து


ல்லாம் வல்ல இறைவனின் ஆசியினால் புனித ரமழான் மாதத்தை கண்ணியமாகவும், இறைவனுக்கு பொருத்தமான வகையிலும் கழித்து ஆன்மீக புத்துணர்வுடன் புனித பெருநாள் தினத்தை அடைந்திருக்கும் இந்நாட்டில் வாழுகின்ற அனைத்து முஸ்லீம்களுக்கும் ஈதுல் பித்ர் நல்வாழ்த்துக்களும் நாட்டின் அனைத்து மக்களுக்கும் நல்வாழ்வு அமையவும் பிராத்திக்கிறேன் என ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. ஏ.எல்.எம் நசீர் அவர்கள் தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் " இலங்கை வாழ் முஸ்லிம்கள் தனது சமயத்துக்குள்ளும் புறம்பாகவும் பல்வேறு சவால்களை முகங்கொடுக்க வேண்டிய சிக்கலான நிலைமைகள் தோன்றியுள்ளன. இவற்றை தாண்டி இந்நாட்டில் நமது பாதுகாப்பையும் இருப்பையும் தக்கவைக்கும் சாத்தியமான வழிகளில் நாம் பயணிக்க வேண்டியுள்ளது. மார்க்க விழுமியங்களும், விஷேடமாக இஸ்லாமிய வழிகாட்டல்கள் மூலமாக நாம் நமது பயணத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது.


எத்தகைய சந்தர்ப்பத்திலும் நமது சமூகம் ஒற்றுமையினூடாக மட்டுமே தனது இலக்கை அடைந்து கொள்ள முடியும் என்பதை வரலாற்றின் பல சந்தர்ப்பங்கள் நமக்கு உணர்த்தியிருக்கின்றன. அவ்வாறான வரலாற்று தருணத்தை நாம் நமது மாநபி முஹம்மத் (ஸல்) அவர்களது அழகிய முன் மாதிரிகள் மூலமாக சந்திக்க வேண்டும் என அனைவரும் இப்புனித தினத்திற் சங்கல்பம் பூணவேண்டியுள்ளது"


"அனைவருக்கும் மீண்டும் எனது ஈதுல் பித்ர் வாழ்த்துக்கள்."
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -